Site icon Tamil News

40 நாய்கள் பாலியல் பலாத்காரம்; சிக்கிய பிரபலம்

நாய்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

ஆடம் பிரிட்டன் அமெரிக்காவை சேர்ந்தவர். பிரபல சேனல்களின் தயாரிப்புகளில் விலங்கியல் நிபுணராக பணியாற்றியுள்ளார்.

வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக கல்விப் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.

முதலைகளைக் கையாள்வதில் வல்லமை பெற்றதால் ‘முதலை மனிதன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக நாய்களை சித்ரவதை செய்து வீடியோ எடுத்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் இருப்பதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version