Site icon Tamil News

இலங்கையில் 4.2 மில்லியன் ரூபாய் மோசடி – பலரை ஏமாற்றிய பெண் கைது

இலங்கையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து அவர கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 4.2 மில்லியன் ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாணந்துறை பகுதியில் வைத்து நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான பெண்ணுக்கு எதிராக இதுவரை 06 முறைப்பாடுகள் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version