Site icon Tamil News

ஆன்லைனில் போதைப்பொருள் கடத்தியதாக 316 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும் முறைமையாக கடத்தல்காரர்களால் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (31) நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஜங்கம தொலைபேசியுடன் தொடர்புடைய 1964 வர்த்தக நிலையங்கள், 2131 அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொடர்பாடல் நிலையங்கள் மற்றும் 1202 இடங்களில் அடையாளம் காணப்பட்ட வர்த்தக வங்கிகள் தொடர்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version