Site icon Tamil News

குவைத்தில் 24 இலங்கையர்கள் கைது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

ஜே.வி.பி.யுடன் இணைந்த ‘எதெர அபி’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Xல் ஒரு பதிவில், குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் விடுவிக்க குவைத் அதிகாரிகளுடன் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து அமைச்சர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை.

Exit mobile version