Site icon Tamil News

சிங்கப்பூரில் கோர விபத்து 23 வயது ஊழியர் மரணம்

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிள் மற்றும் லொரி சம்மந்தப்பட்ட விபத்தில் சிக்கி 23 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 4ஆம் திகதி இரவு, மலேசியாவில் இருந்து அவர் ஜோகூர் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முஹம்மத் இல்யாஸ் இல்யாசா முஹம்மத் இஸ்மாடி என்ற சிங்கப்பூரர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரின் பின்னால் பயணம் செய்த சிங்கப்பூரர் நூர் சூர்யா எமிலியா முகமது இம்ரான் (22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 10:30 மணியளவில் ஏற்பட்ட விபத்தை அடுத்து காதல் ஜோடி சாலையில் தூக்கி எறியப்பட்டதாக ஷின் மின் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற முஹம்மத் இல்யாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காதலி பலத்த காயமடைந்த நிலையில் சுயநினைவின்றி மலேசியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில், நூர் சூர்யா மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்து வரப்பட்டு, யுஷூனில் உள்ள கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இல்யாஸின் உடல் நேற்று ஆகஸ்டு 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு நிகழ்வுக்காக சிங்கப்பூர் கொண்டுவரப்பட்டது.

அவர் உணவு டெலிவரி செய்யும் ஓட்டுநராக பணிபுரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version