Site icon Tamil News

நீதி நடவடிக்கை மூலம் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

109 சந்தேகநபர்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 சந்தேக நபர்கள் தொடர்பான சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 184 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்களின் பட்டியலில் இருந்த 218 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் கஞ்சா, 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ் மற்றும் 353 கிராம் ஹஷிஸ் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 19,507 மாத்திரைகள் மற்றும் சில போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை கைது செய்யும் நோக்கில் கடந்த 18 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் “நீதி நடவடிக்கை” எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

Exit mobile version