2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம் இன்று (29.08) வெளியிடப்பட்டுள்ளது.
‘ரணிலுடன் நாட்டை வென்ற ஐந்தாண்டுகள்’ என்ற தலைப்பில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் ஐந்து முக்கிய கூறுகளை கோடிட்டுக் காட்டுகிறது. தேரவாத வர்த்தக பொருளாதாரம்,” “செயல்பாடு – 2025 க்கு அப்பால்,” “ஒரு ஒளிமயமான சமுதாயத்தை உருவாக்குங்கள்,” “தாய்நாட்டை வெல்” மற்றும் “இலங்கையை ஐக்கியப்படுத்து.” ஆகிய ஐந்து அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்த வைபவத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான அலி சப்ரி, பந்துல குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனத்தை உள்ளடக்கிய www.ranil2024.lk என்ற இணையத்தளமும் இன்று இந்த விழாவின் போது ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.