Site icon Tamil News

மண்ணில் புதையுண்ட 2000 மக்கள் : மீட்க முடியாமல் திணறும் பப்புவா நியூகினியா!

வடக்கு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவினால் 2,000க்கும் மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 370 மைல் (600 கிமீ) தொலைவில் உள்ள எங்க மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியான காகலம் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version