Site icon Tamil News

காங்கோவில் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!

கிழக்கு காங்கோவில் தெற்கு கிவு பகுதியில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

காங்கோவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஐ தாண்டியுள்ளது.

முவெங்கா பிரதேசத்தில் உள்ள பர்ஹினி பகுதியில் கடந்த வியாழக்கிழமை,  நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதாகவும், அப்பகுதியிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.

தலைநகர் கின்ஷாசா, காங்கோ ஆற்றின் கரையோரம், கசாய் மாகாணத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளிலும் நேற்று (29.120 வெள்ளம் ஏற்பட்டது.

Exit mobile version