Site icon Tamil News

இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 இளைஞர்கள்

தொம்பே, மல்வான மைவல பிரதேசத்தில் வயலில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 2 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொம்பே, மல்வான மைவல பிரதேசத்தில் வயல்வெளியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக 119 மற்றும் 118 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தங்கியிருந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால், உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version