Site icon Tamil News

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை :பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.

அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் இந்த வாரத்தில் நடந்த 3-வது என்கவுண்டர் சம்பவம் இது. இதற்கு முன் ரஜோரி மற்றும் அனந்தநாக் மாவட்டங்களில் என்கவுண்டர்கள் நடந்தன. இந்த மோதலில் 4 பாதுகாப்புப் படையினரும், 2 பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய காடோல் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் 4வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version