Site icon Tamil News

இந்தியாவில் சிகிச்சைக்காக வந்த 18 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், கல்வா பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 18 நோயாளிகள் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி மகராஜ் மருத்துவமனை அதிகாரிகள் நேற்று (13.08) இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 10 பெண்களும் அடங்குவர். மேலும், உயிரிழந்த 18 பேரில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறப்புகள் குறித்து விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது, அவர்கள் முதலில் மரணத்திற்கு வழிவகுத்த மருத்துவ உண்மைகளை ஆராய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த மரணத்தால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version