Site icon Tamil News

கரையானால் பறிபோன 18 லட்சம் ரூபாய்… வங்கி Locker-ல் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த பணத்தை கரையான் அரித்த சம்பவம் அப்பகுதியில் பெரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்திரபிரதேசத்தில் மொராதாபாத்தை சேர்ந்த அல்கா பதக் என்ற ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்தே சம்பவம் நிகழந்துள்ளது.

தனது மகளின் திருமணத்திற்காக பணத்தை சேமித்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதில் நகைகள் மற்றும் இந்திய மதிப்பில் 18 இலட்சம் ஆகியவற்றை பத்திரப்படுத்தினார்.அண்மையில் வங்கி மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்ததால், அவ்வேளையில் தனது பெட்டகத்தை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.

மகளின் சேமிப்புக்காக அல்கா பதக் சிறுகச் சேமித்து பத்திரப்படுத்திய 18 இலட்சம் ரூபா நாணய தாள்களை கரையான்கள் அரித்திருந்தன.

வீட்டில் அவ்வளவு பெரிய தொகையை வைப்பு பாதுகாப்பில்லை என்ற காரணத்தினாலேயே வங்கியை நாடியுள்ளார். ஆனால் வங்கியில் கரையான் அரைத்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சேதத்தின் விளைவு குறித்தும், பெட்டகத்தின் பாதுகாப்பின்மை குறித்தும் வங்கி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version