Site icon Tamil News

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய புயல் : மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய சூறாவளியால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷான்ஷன் சூறாவளி ஜப்பானின் தெற்கு தீவான கியூஷுவில் கரையைக் கடந்தது சென்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.

ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளம்  ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கியூஷுவில் மியாசாகி நகரின் மையப்பகுதியில் புயல் வீசிய நிலையில், சுமார் 50 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Exit mobile version