கனேடிய கூட்டமைப்பின் 156 ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வரவேற்பு நிகழ்வு நேற்றைய தினம் (27) கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் தலைமையில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஓன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதிவணக்கத்துக்குரிய பிதா/ அருட்கலாநிதி எஸ் சந்துரூ பெர்ணாடோ,பல நாடுகளின் இராஜ தந்திரிகள், மதத் தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.