Site icon Tamil News

கேரளாவில் நிபா வைரஸ் தொற்றால் 14 வயது சிறுவன் பலி – மக்களுக்கு எச்சரிக்கை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, மேலும் 60 பேர் இந்த நோயைக் கொண்ட அதிக ஆபத்து பிரிவில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுவன் பாண்டிக்காடு நகரைச் சேர்ந்தவர் என்றும், அவருடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

பொது இடங்களில் முகமூடி அணிவது மற்றும் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நிபா வைரஸ் தொற்று என்பது பன்றிகள் மற்றும் பழ வெளவால்கள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் “ஜூனோடிக் நோய்” என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

அசுத்தமான உணவு மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது பரவுகிறது.

Exit mobile version