Site icon Tamil News

காற்பந்துப் போட்டியை பார்க்க வந்த 12 பேர் மரணம்

மத்திய அமெரிக்காவின் El Salvador உள்ள Cuscatlan விளையாட்டு அரங்கத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 100 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர்க் காற்பந்துப் போட்டியைக் காண ரசிகர்கள் கூட்டம் அரங்கத்தில் திரண்டபோது அங்குள்ள கதவு ஒன்று விழுந்ததாக நம்பப்படுகிறது.

அதன் காரணமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமுற்ற இருவர் உயிருக்குப் போராடுகின்றனர்.

அவசர சேவை ஊழியர்கள் மக்களை அரங்கத்திலிருந்து வெளியேற்றியதால் காற்பந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சம்பவம் விசாரிக்கப்படும் என்றும் அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி கூறினார்.

Exit mobile version