Site icon Tamil News

கெஹலிய கோ கம : கைது செய்யப்பட்ட 10 சிவில் செயற்பாட்டாளர்களுக்கு பிணை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு கோரி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போதைய சுற்றாடல் அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை (2ம் திகதி) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exit mobile version