Site icon Tamil News

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவனை கடத்தி அதிர்ச்சி கொடுத்த கும்பல்

பிரான்ஸில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை கடத்தி வைத்து, அவனது பெற்றோரிடம் பணம் கோரிய மூவர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்ற போதும், இது தொடர்பான தகவல்களை தற்போதே பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நள்ளிரவு Blanc-Mesnil நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த மூவர் கொண்ட குழு ஒன்று, அங்கு வசித்த சிறுவன் ஒருவரையும், அவனது தாயையும் மிரட்டி பணம் கோரியுள்ளனர். பின்னர் சிறுவனை அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறுவனின் தயாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டு, 86,000 யூரோக்கள் பணத்தினை கோரியுள்ளனர்.

பின்னர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த 93 ஆம் மாவட்ட பொலிஸார் மறுநாள் மாலை Bobigny இல் வைத்து குறித்த சிறுவனை மீட்டனர். அத்தோடு கடத்தல்காரர்களையும் கைது செய்செய்தனர்.

Exit mobile version