Site icon Tamil News

இலங்கையில் 06 மீனவர்கள் மாயம்!

யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 6 மீனவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம்  சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பலநாள் மீன்பிடிக் கப்பலில் நான்கு மீனவர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி கப்பலில் இரண்டு மீனவர்கள் இருந்ததாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவர்களை தேடுவதற்கு கடற்படை உட்பட அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

Exit mobile version