Site icon Tamil News

புளோரிடாவில் விசாரணைக்காக சென்ற 03 பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம்!

புளோரிடாவில் விசாரணைக்காக சென்ற 03 பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்று அதிகாரிகளும் நேற்று (18.01) மியாமியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மியாமி-டேட் காவல் துறையின் கூற்றுப்படி ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

W 162வது அவென்யூவின் 22000 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டி நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதை அவதானித்த நிலையில், உடனடியாக அங்கு சென்றுள்ளனர்.

போலீசார் முன் கதவை நெருங்கியதும், அந்த நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தாக்குதல்தாரிக்கும், பொலிஸாருக்கும் இடம்பெற்ற சண்டையில் தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version