பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
86 வயதான அவருக்கு கடந்த நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகவில்லை என்று தெரிவித்து வத்திக்கான் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவருக்கு சில நாட்களுக்கு வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் என அதில் குறிப்பட்டுள்ளது.
அதேநேரம் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக உலக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.