Site icon Tamil News

வடகொரியா ராணுவ உளவு செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்த தயாராகும் ஜப்பான்

இன்று, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராக இருப்பதாக அறிவித்ததை அடுத்து ஜப்பான் அரசு ராணுவத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, வடகொரியாவுக்கு எதிராக எஸ்எம் 3 ரக ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்களை பயன்படுத்த அந்நாட்டு ராணுவத்துக்கு ஜப்பான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்எம் 3 என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை அழிக்க அமெரிக்க கடற்படை பயன்படுத்தும் ஒரு வகை தற்காப்பு ஆயுதம் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்ப சோதனைகளை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ள பின்னணியில் வடகொரியா ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது.

எவ்வாறாயினும், பாலிஸ்டிக் ஏவுகணை விபத்துக்கு வடகொரியா தயாராகும் பட்சத்தில், அதனால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா அந்நாட்டு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், வட கொரியா செயற்கைக்கோள் ஏவுகணைகள் எனப்படும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சோதித்தது. இரண்டு ஏவுகணைகளும் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் பறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version