Site icon Tamil News

வசந்த கருணாகொடவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!

வடமேல் மாகாண ஆளுநரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல்  வசந்த கரன்னாகொடவிற்கு தமது நாட்டிற்குள் நுழைய அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் வசந்த கரன்னாகொடவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னாகொட மற்றும் அவரது மனைவி அசோகா கரன்னாகொட ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி ஜே. பிலின்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த மோதல்களின் போது கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் வசந்த கர்ன்னாகொடவிற்கு இந்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Exit mobile version