Site icon Tamil News

ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் அறுவர் பலி!

கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கோஸ்ட்யாண்டினிவ்கா நகரின் மீது ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட செய்தியில்.  ரஷ்யப் படைகள் எஸ் -300 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக பாவ்லோ கைரிலென்கோ கூறினார்.

இத்தாக்குதலில் 17 உயரமான கட்டிடங்கள் 18 வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை அழிக்கப்பட்டன.

மூன்று ராக்கெட்டுகளால் தாக்கப்பட்ட அவ்திவ்கா உட்பட கடந்த 24 மணி நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளான டொனெட்ஸ்கில் உள்ள பல பகுதிகளையும் அவர் பட்டியலிட்டார்.

 

Exit mobile version