Site icon Tamil News

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கம் !

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த சர்வதேச பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி மஹிந்த ராஜபக்ஷ  பவித்ரா வன்னியாராச்சிஇ ரோஹித அபேகுணவர்தன மற்றும் காஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கான தடையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முற்றாக நீக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நபர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைக்கவும் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

2022 மேமாதம் இடம்பெற்ற பதிவான வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இவர்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version