போலி ஆவணங்களை தயாரித்து காணியொன்றை விற்பனை செய்த நபருக்கு 27 கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஞ்சன் லியனகே என்ற நபர் போலி ஆவணங்களை தயார் செய்து 47 அரை இலட்சம் ரூபாவுக்க காணியை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து சிறைத் தண்டனையுடன் அபராதத்தையும் அறிவித்த நீதிபதி, அபராதத் தொகையை செலுத்தாவிடின் மேலதிகமாக 6 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்தார்.