Site icon Tamil News

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

தலைநகர் கீவ் நகரில் பொருட்காட்சி அமைக்கப்பட்டு அங்கு ஜெயின்ட் வீல், ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

ரஷ்யா உடனான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் உருவப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் போரில் சேதம் அடைந்த டாங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களையும் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

இதனிடையே காதல் ஜோடிகளும் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Exit mobile version