Site icon Tamil News

பிலிப்பீன்ஸ் தீ விபத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்ட உயிரிழந்த 3 சிறுவர்கள்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் Taytay வட்டாரத்தில் பரவிய தீயால் 40 வீடுகள் அழிந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 வயதுச் சிறுமி, 12 வயதுச் சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழநதனர்.

ஒரே வீட்டில் வசித்த சில குடும்பங்கள் சிறிய இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் காணப்பட்டனர்.

தீயினால் குறைந்தது 60 குடும்பங்கள் வீடுகளை இழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க 2 மணிநேரமானதென தீயணைப்பு வீரர்கள் குறிப்பிடடுள்ளனர்.

 

Exit mobile version