Site icon Tamil News

பிரித்தானியாவில் கலங்கரை விளக்கத்தில் மோதிய அலை – முக வடிவத்தில் எதிரொலித்த காட்சி

பிரித்தானியாவில் உள்ள கலங்கரை விளக்கத்தில் மோதிய அலை முக வடிவில் தோற்றமளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவில் நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட் என்பவர் கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்ததில் இருந்து வெளிவருவதற்கு புகைப்பட கலைஞராக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று இயற்கை நிகழ்வுகளை புகப்படங்களாக எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து பிரித்தானியாசதர்லாந்து பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றார்.

அங்கு பல்வேறு நிகழ்வுகளை  புகைப்படங்களாக எடுத்தார். அதன் பின்னர், இயன் தான் எடுத்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, இயன் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில் கடல் அலை கலங்கரை விளக்கத்தில் மோதி அது மனித முகம் போன்ற உருவத்தில் பொங்கி எழுந்துள்ளது.

இதைப்பார்த்த இயன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் இயன் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version