Site icon Tamil News

பிரான்ஸ் மீட்புப் பணியாளர்கள் இடிந்து விழுந்த மார்சேய் கட்டிடத்தில் 6வது சடலத்தை கண்டெடுத்துள்ளனர்

வெடிவிபத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த பிரான்ஸ் தெற்கு நகரமான மார்சேயில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஆறாவது சடலத்தை பிரான்ஸ் மீட்புப் பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து எட்டு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர்.

இந்த அனர்த்தம்  இரண்டு குடியிருப்பு கட்டிடங்களை முழுமையாக சேதப்படுத்தியது. எனினும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணாம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

இந்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதானது கடினமான மற்றும் வியத்தகுது என்று மார்சேயில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆலிவியர் க்ளீன், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version