Site icon Tamil News

நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் இணையும் ஃபின்லாந்து!

ஃபின்லாந்து நேட்டோ கூட்டணியில் நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஃபின்லாந்து நேட்டோவில் சேர்வதற்கு தற்போது 30 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், உண்மையில் இது ஒரு வரலாற்று நாள். கூட்டணிக்கு இது ஒரு சிறந்த நாள் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையில் பின்லாந்து பாதுகாப்பானதாக இருக்கும் என ஸ்டோல்டன்பெர்க் கூறினார்.

Exit mobile version