Site icon Tamil News

நிறுத்தாமல் சென்ற கார்.. துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார்

பொல்கஹவெல – குருநாகல் வீதியில்  போதைப்பொருளைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் கார் மீது ​பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று (10) காலை 11.00 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும் அக்காரானது நிறுத்தாமல் சென்றுள்ளது.

இத​னையடுத்து பொலிஸார்  அக்கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவே அக்காரை விட்டு மூவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மூவரையும் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version