Site icon Tamil News

தலிபான்களால் மூன்று பிரித்தானியர்கள் கைது

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் மூன்று பிரித்தானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் இருவர் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மற்றைய நபர் எவ்வளவு காலமாக தலிபான்களின் காவலில் இருந்தார் என்பது வெளியிடப்படவில்லை.

பிரித்தானிய தூதரக சேவைகள் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version