Site icon Tamil News

தமிழகத்தில் 20 வயதுடைய இலங்கை அகதியின் விபரீத முயற்சி

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பொலிஸ் விசாரணையின்போது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவியரான குறித்த இலங்கையர் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியைப் பழனியிலுள்ள கோவிலொன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எட்டயபுரம் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும், அவர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

அவ்வேளையிலேயே அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version