Site icon Tamil News

தனது சேவையை முடித்துக்கொள்ள இந்திய உயர்ஸ்தானிகர் முடிவு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது சேவையை முடித்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மிலிந்த மொரகொட தனது சேவைக் காலத்தை நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் மொரகொட 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

மொரகொட அமைச்சரவை அதிகாரங்களைக் கொண்ட உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதுடன், இலங்கையில் அமைச்சரவை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது உயர்ஸ்தானிகர் இவரே என்பதும் விசேட அம்சமாகும்.

அவரது பதவிக்காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மின்சாரத் திட்டத்தைத் தொடங்குவது உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது.

மிலிந்த் மொரகொட இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது சிரேஷ்ட ஆலோசகராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version