Site icon Tamil News

டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் நகரத்தை குறிவைத்த ரஷ்யா : இருவர் உயிரிழப்பு, 29 பேர் காயம்!

ரஷ்ய உக்ரைன் இடையிலான போர் ஓர் ஆண்டைக் கடந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பகுதிகள் தாக்கப்படுகின்றன.

அந்தவகையில் இன்று காலை டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்டின் நகரம் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு ரஷ்ய எஸ்-300 ஏவுகணைகள் நகர மையத்தை தாக்கியதாக ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் நிர்வாக மற்றும் அலுவலக கட்டிடங்கள் மற்றும் ஏழு வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version