Site icon Tamil News

செருப்புக்குள் தங்கம் கடத்திய நபர் கைது

பெங்களூர் விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாங்கொக்கில் இருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவரை வழக்கமான முறையில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்திருக்கின்றனர்.

அப்போது அவருடைய செருப்பை ஸ்கான் செய்தபோது உள்ளே வித்தியாசமான பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து செருப்பை பிரித்தபோது உள்ளே நான்கு தங்க கட்டிகள் இருந்திருக்கின்றன.

அதன் எடை 1.2 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 69.40 இலட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version