Site icon Tamil News

சூடான் மோதலில் பிரெஞ்சு நாட்டவர் பலி!

உள்நாட்டு மோதல் காரணமாக சூடானில் இருந்து தங்கள் நாட்டு பிரஜைகளை வெளியேற்றுவதில் பிரெஞ்சு அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

அவ்வாறாக அங்கிருந்து வெளியேறும் போது பிரஞ்சு நாட்டவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  கார்ட்டூமில் இருந்து வெளியேறும்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் யார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டது என்ற தகவல் வெளியாகவில்லை. மாறாக மோதலில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று காலை தூதரகத்திற்கு வெளியே இருந்த வாகனத் தொடரணி மீது  ராணுவ விமானத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version