Site icon Tamil News

சுவிட்சர்லாந்தின் Yverdon பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் வியாழக்கிழமை அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்துள்ளனர். அதன்பின்னர் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 45 வயது ஆண், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏன் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். மேலும் சாட்சிகளை பொலிசார் தேடி வருகின்றனர். காலை 6:40 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது. ஏராளமான பொலிஸ் அதிகாரிகள், துணை மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Yverdon பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் வியாழக்கிழமை அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்துள்ளனர். அதன்பின்னர் தீ விபத்து ஏற்பட்டு வீடு முற்றிலும் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 45 வயது ஆண், 40 வயது பெண் மற்றும் 13, 9 மற்றும் 5 வயதுடைய மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

ஏன் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதற்கான காரணத்தை ஆய்வாளர்கள் தேடி வருகின்றனர். மேலும் சாட்சிகளை பொலிசார் தேடி வருகின்றனர்.

காலை 6:40 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது. ஏராளமான பொலிஸ் அதிகாரிகள், துணை மருத்துவர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version