Site icon Tamil News

சீனாவை உலுக்கிய காலநிலை – அதிகரிக்கும் மரணங்கள்

சீனாவின் வடக்குப் பகுதி மாகாணமான ஹிபெய்யில் பெய்த கனமழை காரணமாக 29 போ் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த மாகாண அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த மாதம் வீசிய டோக்சுரி புயலின் விளைவாக மாகாணம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 29 போ் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர, வெள்ளப் பகுதிகளில் 16 பேரைக் காணவில்லை. அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த மழை வெள்ளத்தால் 9,580 கோடி யூவான் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version