சிங்கப்பூரில் நபர் ஒருவரின் மீது வெந்நீரை ஊற்றியதற்காக வெளிநாட்டை சேர்த்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாகவும், அந்த பெண்ணுக்கு 28 வயதாகின்றதென பொலிஸார் தெரிவிததுள்ளனர்.
ஆபத்தான முறையில் தானாக முன்வந்து வெந்நீரை ஊற்றி காயப்படுத்தியதாக இந்தோனேசியாவை சேர்ந்த அந்த பெண் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நடந்த நான்கு மணி நேரத்திற்குள் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அதாவது கடந்த மார்ச் 23 அன்று காலை 11:30 மணியளவில், சிங்கப்பூரில் இருந்து இந்தோனேஷியா நோக்கிச் செல்லும் படகில் அவர் கைது செய்யப்பட்டார்.