Site icon Tamil News

சிங்கப்பூரில் திங்கட்கிழமை முதல் அமுலாகும் நடைமுறை!

சிங்கப்பூரில் மின்னியல் சாலைக் கட்டணங்கள் ஏழு இடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் ஒரு வெள்ளி உயரவிருக்கின்றன.

அடுத்த திங்கட்கிழமையிலிருந்து இந்த நடைமுறை அமுலாகவுள்ளது.

ஆயர் ராஜா விரைவுச் சாலை, தீவு விரைவுச் சாலை, மத்திய விரைவுச் சாலை முதலியவற்றின் சில பகுதிகளில் கட்டணம் கூடவிருக்கிறது.

அண்மை மறுஆய்வைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறுகிறது.

போக்குவரத்துச் சூழலை அணுக்கமாகக் கண்காணித்துத் தேவைப்பட்டால் கட்டணத்தை மேலும் மாற்றுவது குறித்து ஆராயப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

அனைத்துக் கட்டண மாற்றங்களின் விவரங்களும் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version