Site icon Tamil News

சக மாணவனுக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்த 6 மாணவர்கள் !

மாணவன் ஒருவருக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை 6 மாணவர்கள் சேர்ந்து கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவனுக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை கருதிற்கொண்டு பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவன் தனது வகுப்பில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு அவ் மாணவர்களை அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல்துறையினரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Exit mobile version