Site icon Tamil News

கொங்கோவில் ஐ.எஸ் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலி

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்)  சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது,

இந்த தாக்குதலில் சுமார் 20 பொதுமக்கள்  கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இஸ்லாமிய அரசு( ஐ.எஸ்)  தனது டெலிகிராம் சேனலில் ஒரு அறிக்கையில் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

பெனியின் புறநகரில் உள்ள முசண்டாபா என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான வன்முறை அலையின் ஒரு பகுதியாகும்.

இது கிழக்கில் உள்ள உகாண்டா குழுவான நேச நாட்டு ஜனநாயகப் படைகள் (ADF) மீது இராணுவமும் உள்ளூர் அதிகாரிகளும் குற்றம் சாட்டுகின்றன.

இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இந்த செயற்பாடு இருப்பதாக கொங்கோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version