Site icon Tamil News

குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்த வடகொரியா!

வடகொரியா இன்றைய தினம் குறுந்தூர ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்கு கடற்கரையில் உள்ள கடல் பகுதியில் குறித்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கிம் ஜொங் உன்னின் சகோதரி அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு இராணுவபயிற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் ஏவுகணை பரிசோதனை செய்யவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம் இவ்வாண்டின் சில மாதங்களிலேயே வடகொரியா பெருமளவான ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version