Site icon Tamil News

கிளிநொச்சியில் மனைவியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் பகுதியில்  ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முற்பகல் மனைவியை பார்க்கச் சென்ற போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த நபருக்கும்  மாமனாருக்கும் இடையில்  ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து,  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலில் காயங்களுக்கு உள்ளான குறித்த நபர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக  விசாரணைகளை கிளிநொச்சி தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Exit mobile version