Site icon Tamil News

கருங்கடல் ஒப்பந்த நீட்டிப்பு குறித்து உக்ரைன் பேச்சுவார்த்தை!

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து உக்ரைன் பங்குதாரர்களுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.

உக்ரைன் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட்டன. இதனையடுத்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

ஐ.நா மற்றும் துருக்கி கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தம், காலாவதியாக உள்ள நிலையில், அதனை நீட்டிக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு வலியுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் ரஷ்யா ஒத்துழைப்ப வழங்குமா என்ற கேள்விக்குறியும் எழும்பியுள்ளது. ரஷ்யா மீது மேற்கத்தேய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள ரஷ்யா இந்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version