Site icon Tamil News

கட்டுநாயக்க – சென்னை விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நேற்றைய தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version