Site icon Tamil News

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் யாழ்ப்பாண தமிழ் இளைஞர்

இன்றும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் ராஜஸ்தான் றோயல் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன.

தற்போது இந்தியன் பிறீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

என்னுடன் குமார் சங்கக்கார கதைத்திருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல கவனிக்கிறேன் என்றார். அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார்.

அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் என்றார்.

Exit mobile version